வராது வராது வரவே வராது - குழலி.

[+/-] show/hide this post

வாங்க.. வாங்க எல்லாரும் வாங்க.

நம்ம அண்ணன் குழலி / Kuzhali அவர்கள் We The People அவர்களின் இந்த பதிவில் கீழ்கண்ட பின்னூட்டம் இட்டார்கள்.

1. 5 வயதில் தற்கொலை முயற்சி செய்த ஒரு ஆள் இருக்காருங்க...
2. வீட்டில அடிப்பாங்கன்னு தான், ஆளு யாருன்னு தெரியனுமென்றால் தனி மடல் அனுப்புங்க சொல்றேன்...
3. //அதிலிருந்து தனி வன்னிய நாடு கிடைத்தால் தான் உங்கள் தேசப்பற்று வருமா?//
வாழ்க ஜெய், மீண்டும் மீண்டும் என்னை சாதிய அடையாளத்தில் அடக்க முயலும் உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்....

4. அப்சலை நான் பாராளுமன்ற தாக்குதலில் ஈடுபடவில்லை என்று சொல்லவில்லையே,
5 . ஏன் இந்தியா என்று பிரிந்தீர்கள், அப்படியே இலங்கை, பர்மா, கீழைநாடுகள் என்று பிரிட்டிஷ் அரசாங்கத்தின் மாநிலங்களாக இருக்க வேண்டியது தானே?
6. தேசபக்தி என்றால் என்ன என்று சொல்லுங்கள் முதலில், அதாவது எந்த இனக்குழு எப்படி அழிந்து போனாலும் சரி, எந்த மொழியின் மீது பெரும்பான்மை மொழி ஆதிக்கம் செலுத்தினாலும் சரி, எவன் கலாச்சாரத்தை எவன் அழித்தாலும் சரி, இந்தியன் என்று சொல்லிக்கொண்டே பம்பாயில் தமிழனை(தமிழன் என்பதற்காக) அடிடா என்றும், பெங்களூரிலே அடிடா என்றும், பீகாரி காரனை பம்பாயில் அடிடா ஆனால் எல்லாம் இந்தியா? இப்படியான போலி தேசியத்தை தான் நீங்கள் தேசப்பற்று என்றால் சத்தியமாக எனக்கு தேசப்பற்று வராது வராது வரவே வராது.
7. பிரிட்டிஷ் அரசாங்கத்தின் பிரஜையாக இல்லாமல் போக உங்களை தூண்டியது எது? சூரியன் மறையாத சாம்ராஜ்யத்திலிருந்து இந்தியா சுதந்திரம் பெற வேண்டுமென எது தூண்டியது? முதலில் இதற்கு பதில் சொல்லுங்கள்...
8. இனி தேசப்பற்று பற்றி பேசுவதற்கு முன் தேசபக்தி என்றால் என்ன என்று சொல்லுங்கள், முதலில் தேசபக்தியை வரையறுங்கள் பிறகு பேசலாம் எதுவென்றாலும்...

எல்லாம் ஒரு விளம்பரம்தாம். சொந்தமா பதிவு போட்டா யாரும் பாக்க பார்க்கமாட்டேனுராங்க. அதனால நம்ம கலையுலகத்தை தொடர்ந்து நானும் கரு காப்பி அடித்துவிட்டேன்.

சரி விசயத்திக்கு வருவோம். அண்ணே குழலி அண்ணே 6வது பாயின்ட்ல வாராது..வராதுனு கூக்குரலிட்டீங்களே. உங்களுக்கு எது எது வராதுனு ஒரு லிஸ்ட் போட்டு தரமுடியுமா. அப்பத்தானே நம்ம வலையுலக நண்பர்கள் அதைபத்தி கேட்டமாட்டானுக. சொல்லுங்க அண்ணே.

9 மறுமொழிகள்:

  1. Comment at Blogger வேந்தன் மொழிந்தது...
    ஆஹா ஆரம்பிச்சிட்டாங்கய்யா ஆரம்பிச்சிட்டாங்க!
      Edit Comment
  2. Comment at Blogger நாடோடி மொழிந்தது...
    ஹலோ..ஹலோ..

    யாராவது இருக்காங்களா?...

    அண்ணே குழலி அண்ணே எங்கண்ணே இருக்கீங்க.

    அப்பா தந்தைகுலங்கலே தாய்குலங்கலே எங்கப்பா இருக்கீங்க.
    என் கண்ணுல பூ பூத்துருச்சு..
      Edit Comment
  3. Comment at Blogger குழலி / Kuzhali மொழிந்தது...
    அண்ணனா? நான் அண்ணனா? என்னை அண்ணன் என்று கூறி என் வயசை அதிகமாக காண்பிக்க முயலும் நாடோடிக்கு என் கண்டனங்கள்... எத்தனை பேருயா இப்படி கெளம்பியிருக்கிங்க? :-)
      Edit Comment
  4. Comment at Blogger நாடோடி மொழிந்தது...
    @@@அண்ணனா? நான் அண்ணனா?@@@

    கோவிச்சுகாதிங்க அண்ணே. ஊர்ல பழக்கம்.
    எல்லாம் ஒரு பரஸ்பர மரியாதைதான்.

    @@எத்தனை பேருயா இப்படி கெளம்பியிருக்கிங்க? :-)@@

    இப்போதைக்கு நான் ஒருத்தன்தாணே இருக்கேன். யாரும் வரமாட்டேனுரானுங்க.
      Edit Comment
  5. Comment at Anonymous Anonymous மொழிந்தது...
    தோ.. நான் இருக்கேண்ணே தம்பி உங்கூட...
      Edit Comment
  6. Comment at Blogger நாடோடி மொழிந்தது...
    @@தம்பி உங்கூட..@@

    தம்பி நீ ஒரு தங்ககம்பி.
    எனக்கு ஆதரவு கொடுத்த உனக்கு உண்டு பட்டா போட்ட நிலம் என் நெஞ்சில்..
      Edit Comment
  7. Comment at Blogger நாடோடி மொழிந்தது...
    என் பதிவை பார்த்து எல்லோரும் புறமுதிகிட்டு ஓடிவிட்டதால் நான் கடையை மூடுகிறேன்.

    அடுத்த தடவ கரட்டுகா காப்பி அடிச்சுக வேண்டியதுதான்.
      Edit Comment
  8. Comment at Anonymous Anonymous மொழிந்தது...
    நாடோடி நடத்துங்க...நாங்கள்லாம் வெளியிலிருந்து ஆதரவு குடுக்குறோம்..பாமக மாதிரி
      Edit Comment
  9. Comment at Anonymous Anonymous மொழிந்தது...
    வரவே வராதுன்னு அவர் சொன்னது - ஆய்.

    வாழைப்பழம், கொய்யாக்காய் அப்படீன்னு எது சாப்பிட்டு பாத்தாலும் குழலிக்கு தினமும் வரவே வராதாம்.

    அதனால தான் அவரோட புகைப்படத்திலே கூட எப்பவும் கரடி கக்கூஸ் போற மாதிரி அவஸ்தை எபெக்ட் இருக்கும் பாருங்க.
      Edit Comment
  10. Post a Comment

<< முகப்பு (Home)